Wednesday, May 28, 2014

Sri Nadarajar Pathigam

 
சிவமயம் 

ஸ்ரீ நடராஜர் பதிகம் 

ஓம்  நமச்சிவாய ஓம் ஓம்  நமச்சிவாய 
ஓம்  நமச்சிவாய ஓம் ஓம்  நமச்சிவாய 

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவ தேவனே!
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே!
மங்கலங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே 
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே!

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம் 
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம் 
செந்தமிழ்ச்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம் 
சிவந்தபுரம் பங்கயம் உவந்தருள் நடேசனே 

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை 
என்றும் தீமை அனுகிடமால் ஈசனே தடுத்துவை 
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை சேர்த்துவை நடேசனே 

ஆ-பயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ் சாமிர்தம் 
ஆலைவாய்க் கரும்பு, தெங்கு தேன், சுகந்த சந்தனம் 
நீ-பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே!
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே!

அட்டநாக பூஷணம் அளிக்கவல்லன் அல்லலனே!
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே!
இட்டமாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம் 
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே!

வில்லினால் அடிக்கவோ வீசுகல் பொறுக்கவோ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ?
நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே!

ஆட, நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர் 
அல்ல அல்ல என்தலைமேல் சூடஎன்று சொல்கிறேன்!
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால் 
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே!

மழுவெடுத்(து) எதைவிளக்க மன்றுதொன்றும் ஓடினாய் 
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய்?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்?
கையில் நாம் எடுத்ததூபம் கொள்ளுவாய் நடேசனே!

எடுத்ததூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே!
சரணம் உன்னை அன்றிஏது? தாங்குவாய் நடேசனே!

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம் 
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடைத்ததாம் 
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே!
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கன் சாய்ந்து கொள் நடேசனே!

ஓம் நமச்சி வாயஓம் சிவாயநம ரூபனே!
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே! சங்கீதனே!
வாமியாய்த் தழைத்தசிவ காமிகாதல் நேசனே!
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே!
     

Tuesday, May 27, 2014

Arahara Sivanae Aadugavae

உ 
சிவமயம் 

அரஹர சிவனே ஆடுகவே 

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே 
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே                           (ஆடுக)

சிவகை லாசா பரமேசா திரிபுரம் எறிந்த நடராஜா 
பவபயம் போக்கும் பரமேசா பனிமலை ஆளும் சர்வேசா                  (ஆடுக)

அறுகொடு தும்பை மலராட அணிமணி மாலைகள் தானாட 
பெருகிடும் கங்கை தலையாட பிறைமதி யதுவும் உடனாட             (ஆடுக)

சூலம் உடுக்கை உடனாட சூழும் கணங்கள் உடனாட 
ஆலம் குடித்தோன் ஆடுகவே அடியார் மகிழ ஆடுகவே                     (ஆடுக)

ஆலவா யரசே சொக்கேச அவனியை காக்கும் பரமேசா 
ஆலங்காட்டில் ஆடிடுவாய் அரஹரசிவனே ஆடுகவே                      (ஆடுக)

திருக்கடவூரின் கடை ஈசா தில்லையம் பதியில் நடராஜா 
திருமுல்லை மாசிலா மனியீசா திருநடம் ஆடுகவே ஆடுகவே     (ஆடுக)

மயிலை கபாலி ஈஸ்வரனே, மதுரையில் ஆடிய ஆட்டமென்ன 
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன கால்மாறி ஆடிய நடராஜா        (ஆடுக)


Monday, May 26, 2014

Vinayagar Agaval

உ 
சிவமயம் 
ஒளவையார்  அருளிய  
விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம் 
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் - அரை ஞாணும் பூந்துலகில் ஆடையும் 
வன்னமருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப் 
பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்                                                                                5 

வேழ முகமும் விளங்கு சிந்தரமும்,
அஞ்சு கரமும், அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்,
நான்றவாயும் நாள் இருபுயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்.                                                                                   10

இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்,
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் 
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான 
அற்புதம் நின்ற கற்பகக் களிரே!
புப்பழம் நுகரும் மூஷிக வாகன!                                                                                           15 

இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித் 
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி 
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே,
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்து என்  உளம்தனில்  புகுந்து                                                                20

குருவாடி வாகிக் குவலயம் தன்னில் 
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என் 
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே 
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்                                                                        25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக்கு அருளி 
கருவிகள் ஒடுக்கும் கருத்தினை அறிவித்து,
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து                                                                    30 

தளம் ஒரு நான்கும் தந்துஎனக் கருளி 
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பதே வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி 
ஆறா தாரத்து அங்குச நிலையும்                                                                                           35

பேறா நிறத்திப்  பேச்சுரை அறுத்தே,
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி,
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்                                                                            40

குண்டலி அதனில் கூடிய அச்சபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து,
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்                                                                            45

குமுத சகாயன் குணத்தையும் கூறி,
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற்ச்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முக சூச்சமும் 
என்முகம் ஆக இனிதெனக் கருளிப்                                                                                     50

புரியிட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் 
கருத்தினில் கபால வாயில் காட்டி,
இருத்தி முத்தி இனிது எனக் கருளி,
என்னை அறிவித்து, எனக்கருள் செய்து                                                                             55

முன்னை வினையின் முதலைக் களைந்தே,
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து,
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன 
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்                                                           60

எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் கலைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி,
அனுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்                                                        65

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்ச க்கருத்தின் அரும் பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து                                                                                   70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயகா! விளைகழல் சரணே!
                                                           



Pillayar Vanakkam

உ 
சிவமயம் 

பிள்ளையார் வணக்கம் 

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் 
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்              (பிள்ளையார்)

ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்            (பிள்ளையார்)

மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து  மந்திரத்தை நெஞ்சில் கட்டும் பிள்ளையார்                  (பிள்ளையார்)

அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்                                 (பிள்ளையார்)
 

Kaiththala niraikani

உ 
சிவமயம் 

கைத்தல நிறைகனி 
(அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்)


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி 
           கப்பிய கரிமுக                                                                 .....னடிபேனிக் 
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ   
           கற்பக மெனவினை                                                       .....கடிதேகும் 
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் 
           மற்பொரு திரள்புய                                                        .....மதயானை 
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை 
           மட்டவிழ் மலர்கொடு                                                  .....பணிவேனே 
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் 
           முற்பட எழுதிய                                                              .....முதல்வோனே 
முப்புர  மெரிசெய்த அச்சிவ னுறைரதம் 
            அச்சது பொடிசெய்த                                                     .....அதிதீரா 
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்    
            அப்புன மதனிடை                                                         .....இபமாகி 
அக்குற மகளுட நச்சிறு முருகனை 
            அக்கண மணமருள்                                                     .....பெருமாளே 

Vezha Mugam

உ 
சிவமயம் 

வேழமுகம் 

வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் 
வெற்றி முகத்து வேலவனைத் தொழ  புத்தி மிகுந்து வரும் 
வெள்ளிக்கொம்பன் விக்னெஷ்வரனைத் தொழ 
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே 


சிந்தித் தவர்க்கருள் கணபதி                                                                                        ஜயஜய 
சீரியவானைக் கன்றே                                                                                                    ஜயஜய
அன்புடை அமரரைக் காப்பாய்                                                                                    ஜயஜய
ஆவித் துணையே கணபதி                                                                                           ஜயஜய
இண்டைச் சடைமுடி இறைவா                                                                                  ஜயஜய
ஈசன் தந்தருள் மகனே                                                                                                    ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய்                                                                                        ஜயஜய
ஊர்நவ சந்தி உகந்தாய்                                                                                                   ஜயஜய
எம்பெரு மானே இறைவா                                                                                            ஜயஜய
ஏழலகுந் தொழ  நின்றாய்                                                                                             ஜயஜய
ஐயா கணபதி நம்பியே                                                                                                    ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா                                                                                       ஜயஜய
ஓங்கிய வானைக் கன்றே                                                                                             ஜயஜய
ஒளவிய மில்லா அருளே                                                                                              ஜயஜய
அஃகர வஸ்து ஆனவா                                                                                                    ஜயஜய
கணபதி என்வினை களைவாய்                                                                                  ஜயஜய
ஙப்போல மழுவொன்  றேந்திய                                                                                  ஜயஜய
சங்கரன் மகனே சதுரா                                                                                                   ஜயஜய 
ஞய நம்பினர் பாலாடிய                                                                                                 ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா                                                                                       ஜயஜய
இணங்கிய பிள்ளைகள் தலைவா                                                                              ஜயஜய
தத்துவ மறைதரு வித்தகா                                                                                           ஜயஜய
நன்னெறி விக்கின விநாயகா                                                                                      ஜயஜய
பள்ளியி லுறைதரும் பிள்ளாய்                                                                                   ஜயஜய
மன்றுள் ளாடும் மணியே                                                                                              ஜயஜய இயங்கிய ஞானக்குன்றே                                                                                              ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்                                                                                        ஜயஜய
இலவக் கொம்பொன் றேந்தியே                                                                                 ஜயஜய
வஞ்சனை பலவந் தீர்ப்பாய்                                                                                          ஜயஜய
அழகிய ஆணைக் கன்றே                                                                                              ஜயஜய
இளமத யானை முகத்தாய் இரகுபதி விக்கின விநாயகா                                ஜயஜய
ஆனந்த லோடாதியில் அடிதொழ                                                                             ஜயஜய
   

Sri Ganesa Pancharathnam

உ 
சிவமயம் 

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் 
(ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது)

முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் 
கலதராவதம்சகம் விலாஸி லோக ரக்ஷகம் 
அநாயகைக நாயகம் விநோசிதேபதைத்யகம் 
நதாசு பாசு நாசகம் நாமாமிதம் விநாயகம்                                                                           1

நதேதராதிபீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் 
நமத்ஸு  ராரி நிர்ஜரம் நதாதி காபதுத்ரம் 
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் 
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்                                                                    2

ஸமஸ்த  லோக சங்கரம் நிரஸ்த்த  தைத்ய  குஞ்சரம் 
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ர மக்ஷரம் 
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் 
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்                                                   3

அகிஞ்சநார்த்தி மார்ஜனம் சிறந்தநோக்தி பாஜனம் 
புராரி பூர்வ நந்தனம் ஸுராரிகர்வ சர்வணம் 
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்சயாதி பூஷணம் 
கபோல தான வாரணம் பஜேபுரான  வாரணம்                                                                  4

நிதாந்தகாந்த தந்த காந்தி மந்தகாந்தகாத்மாஜம் 
அசிந்த்ய ரூப மன்த ஹீன மந்தராய க்ருந்தனம் 
ஹ்ருதந்தரே  நிரந்தரம் வசந்தமேவ யோகினாம் 
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்                                                                     5

மகாகநேசபஞ்சரத்னமாதரேன யோன்வஹம் 
பிரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரன் கணேச்வரம் 
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் சுபுத்ரதாம் 
சமாஹிதாயு ரஷ்டபூதிம் அப்யுபைதி ஸோசிராத்                                                          6