உ
சிவமயம்
கைத்தல நிறைகனி
சிவமயம்
கைத்தல நிறைகனி
(அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்)
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக .....னடிபேனிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை .....கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய .....மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு .....பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய .....முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த .....அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை .....இபமாகி
அக்குற மகளுட நச்சிறு முருகனை
அக்கண மணமருள் .....பெருமாளே
No comments:
Post a Comment