உ
சிவமயம்
விநாயகர் வணக்கம்
சிவமயம்
விநாயகர் வணக்கம்
மங்களத்து நாயகனே மன்னாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்
எங்கள் குழவிடிவிளக்கே எழில்மனியெ கணபதியே!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எமையாள வேண்டுமென
அப்பன் அவன் மடி அமரும் அருட்கனியே கணபதியே!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கி உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன் தமிழில் போற்றுகின்றேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிபாய் கணபதியே!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைகாக்க
பொன் வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்!
உள்ளமதில் நலங்கூட ஓங்குபுகழ் வளங்குட
வெள்ளமெனப் பொருள்கூட வெற்றியது கைகூட
உள்ளுருகி யாம்முதலாய் உன்னடியில் தெண்டனிட்டோம்
வெள்ளுருக்கு விநாயகனே வேண்டுநலந் தாருமையா
காதிரண்டும் முறம்போல கண்ணிரண்டுங் கடுகுமணி
ஊதிவைத்த பெருவயிறு உன்னுருவம் யானை ஐயா
ஏதிடரும் வாராமல் எந்நாளுங் காப்பவனே
ஆதிசிவன் பாலகனே அருள்பொழியுங் கணபதியே
அப்பமுண்டு பொரிகடலை அவலுமுண்டு சீனியுண்டு
முப்பழமும் தேனுடனே மோதகத்துப் படையலுண்டு
தப்பாமல் எடுத்தமுறை சரியாக்கித் தருபவனே
எப்போதும் எமக்கருள எழுந்துவருங் கணபதியே.
No comments:
Post a Comment